தமிழ்நாடு

'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ்'

DIN

தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், கோபிசெட்டிபாளையத்தில் 750 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
தற்போது, மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளிகளுக்கும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் நாளிதழின் ஒவ்வொரு பிரதி வழங்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT