தமிழ்நாடு

ஊதிய உயர்வு வேண்டாம்: சட்டப்பேரவை செயலாளருக்கு டிடிவி தினகரன் கடிதம்! 

DIN

சென்னை  சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

பயணப்படி உள்ளிட்ட இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களின் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த சம்பள உயர்வானது ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார். மேலும் அரசின் நிதி நிலைமை சீராக இல்லாத நிலையில் இந்த ஊதிய உயர்வு தேவையற்றது என்றும் அவர் தனது கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT