தமிழ்நாடு

பேருந்து கட்டண உயர்வு: திமுக இன்று ஆர்ப்பாட்டம்

DIN

பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் சனிக்கிழமை (ஜன.27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அரசுப் பேருந்து கட்டணத்தைத் தமிழக அரசு அண்மையில் திடீரென உயர்த்தியது. டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவை காரணமாக பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டதாகக் கூறி, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், போராட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT