முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் வேலை: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் வேலை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 10:01 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் வேலை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஒரே நேரத்தில் தேர்தல் விவகாரம் குறித்து சட்ட ஆணையத்திடம் கருத்து கூறியுள்ளோம். லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும். 

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வருகையில் உள்நோக்கம் ஏதும் இல்லை. கட்சியை பலப்படுத்த வழக்கமாக பாஜக தேசியத் தலைவர் மாநிலங்களுக்கு செல்கிறார். 

Advertisement

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை. முட்டை நிறுவனத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் அரசுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.