முகப்பு
தமிழ்நாடு

துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

Updated On : 10 ஜூலை, 2018 at 2:11 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் கடந்த மே 22, 23-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகும்படி சிபிசிஐடி பிரிவு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, முதல்நாளான திங்கள்கிழமை, காயமடைந்தவர்களில் 10 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு சாட்சிகளை பதிவு செய்தனர். சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், துணைக் கண்காணிப்பாளர் அணில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, காயமடைந்த அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.