தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
கடந்த மே 29-ஆம் தேதியன்று சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தினந்தோறும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.
19 மசோதாக்கள்: லோக் ஆயுக்த உள்பட 19 முக்கிய சட்ட மசோதாக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. சட்டப் பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.