முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் சிகிச்சைக்கான தொகை அதிகரிப்பு: முதல்வர்

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

Updated On : 10 ஜூலை, 2018 at 1:40 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:-
முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை ரூ.12,000-த்திலிருந்து ரூ.25,000-மாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். 
இதைத்தொடர்ந்து, இந்த நிதியை மேலும் உயர்த்த வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள், முன்னாள் 
மேலவை உறுப்பினர்கள், அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.-க்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக ஜூலை 1 -ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.