முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் சிகிச்சைக்கான தொகை அதிகரிப்பு: முதல்வர்
முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:-
முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை ரூ.12,000-த்திலிருந்து ரூ.25,000-மாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார்.
இதைத்தொடர்ந்து, இந்த நிதியை மேலும் உயர்த்த வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள், முன்னாள்
மேலவை உறுப்பினர்கள், அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.-க்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக ஜூலை 1 -ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.