தமிழ்நாடு

கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் - ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை நலம் விசாரித்தார். 

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இயல்பான முதுமை காரணமாக உடல்நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை கடந்த வியாழக்கிழமை முதல் அறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து, தமிழக துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். 

இவர்களைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தனர். நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றதால் வெள்ளிக்கிழமை இரவு ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். 

இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து குலாம் நபி ஆசாத், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் என பலர் தொடர்ச்சியாக நேரில் சென்று நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இரவு 8.45 மணிக்கு காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதி குறித்து நலம் விசாரிப்பதாக கூறப்பட்டது. 

அதன்படி, ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இதையடுத்து, ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,   

"கருணாநிதியின் உடல் நிலை குறித்து நலம் விசாரிக்க வந்தேன். அவர் உறங்கிக்கொண்டிருப்பதால் நேரில் சந்திக்க முடியவில்லை. அங்கு இருந்த அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். என்னால் ஆறுதல் மட்டும் தான் கூறமுடியும். கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT