முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவுப்படி 6 பேரின் உடல்கள் இன்று பிரேதப் பரிசோதனை

நீதிமன்ற உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 6 பேரின் உடல்கள் புதன்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

நீதிமன்ற உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 6 பேரின் உடல்கள் புதன்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அதே விதிமுறைகளை கடைப்பிடித்து, இதுவரை பிரேதப் பரிசோதனை செய்யப்படாத 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 6 பேரின் உடல்களையும் அகில இந்திய மருத்துவக் குழுவினர் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் புதன்கிழமை (ஜூன் 6) இரவுக்குள் பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →