உதகை அருகே நீர் இடி விழுந்து 15 அடி பள்ளம்
உதகை அருகே எப்பநாடு பகுதியில் நீர் இடி விழுந்ததில் நிலத்தில் 15 அடி ஆழம், 12 அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகை அருகே எப்பநாடு பகுதியில் நீர் இடி விழுந்ததில் நிலத்தில் 15 அடி ஆழம், 12 அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகை அருகே எப்பநாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நீர் இடி விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தில் 15 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தகவலின்பேரில் உதகை தீயணைப்புத் துறை அதிகாரி சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இடி விழுந்ததில் 15 அடி ஆழம், 12 அடி அகலத்தில் பள்ளம் உருவாகியிருந்தது தெரிய வந்தது.