தமிழக சட்டப் பேரவைக்கு 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. வனம், எரிசக்தி, உள்ளாட்சி, தொழில், பொதுப்பணித் துறை என முக்கிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை வியாழக்கிழமை (ஜூன் 14) நிறைவேறியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் பேரவைக்கு 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டப் பேரவை மீண்டும் ஜூன் 25-ஆம் தேதி கூடும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.