தமிழ்நாடு

கபினியில் நீர் திறப்பு.. ஒகேனக்கல் அருவி.. மேட்டூர் அணை நீர்மட்டம்: ஒரு ரவுண்ட் அப்

DIN

சென்னை: கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கபினி அணையில் இருந்து இதுவரை 15 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று 23,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவை கர்நாடக அரசு உயர்த்தியுள்ளது.

கபினி அணையின் முழுக் கொள்ளளவு 84 அடியாக இருக்கும் நிலையில், தற்போது அணையில் 82.25 அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.

மழை காரணமாக தற்போது கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 15,200 கன அடியாக அதிகரித்திருப்பதால், நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியில் இருந்து தற்போது 4,586 கன அடியாகக் குறைந்துள்ளது. தற்போது கபினியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்திருப்பதால், நீர் வரத்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 50.32 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அணையில் 18.01 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
காவிரியில் நீர்வரத்துக் குறைந்திருப்பதை அடுத்து ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர் வரத்து 3,500 கன அடியாகக் குறைந்தது.  இதனால் 4வது நாளாக பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT