நீலகிரியில் வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து
நீலகிரியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளி காயமடைந்தார்.
நீலகிரியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளி காயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம், அரவங்காடு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இன்று இத்தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளி சுரேஷ் என்பவர் காயமடைந்தார்.
உடனே அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரிவரவில்லை.