தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் அம்ரீஷ் புஜாரி ஆஜர்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அம்ரீஷ் புஜாரி இன்று ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அண்மையில் அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அம்ரீஷ் புஜாரிக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்ரீஷ் புஜாரி 2011-2013 ஆகிய காலகட்டத்தில் உளவுப்பிரிவின் ஐ.ஜியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT