தமிழ்நாடு

நடராஜன்  இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறையிலிருந்து பரோலில் வெளிவந்தார் சசிகலா! 

இன்று அதிகாலை மரணமடைந்த தனது கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு பரப்பன அக்ராஹாரா  சிறையிலிருந்து சசிகலா பரோலில் வெளிவந்தார்.    

DIN

பெங்களூரு: இன்று அதிகாலை மரணமடைந்த தனது கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு பரப்பன அக்ராஹாரா  சிறையிலிருந்து சசிகலா பரோலில் வெளிவந்தார்.    

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு கால தண்டனையை அனுபவித்து வருகிறார்

அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையைஅடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

பின்னர் ஓய்விலிருந்த நடராஜனுக்கு கடந்த 17-ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் நடராஜனது  இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான விளாரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நடராஜனது இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்கிறார். எனவே நடராஜனின் இறப்பு சான்றிதழுடன் 15 நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் சசிகலா பங்கேற்பதற்காக பெங்களூரு சிறை நிர்வாகம் 15 நாள் பரோல் வழங்கி பெங்களூரு சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதனை அடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு பரப்பன அக்ராஹாரா  சிறையிலிருந்து சற்று முன்னதாக சசிகலா பரோலில் வெளிவந்தார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சையை அடையும் அவர் இன்று இரவு 7 மணி அளவில் விளாறை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

காசநோய் பரிசோதனை முகாம்

மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

இலவச கண் சிகிச்சை முகாம்

கடற்படை ரகசிய தகவல் கசிவு வழக்கு: 4-ஆவது குற்றவாளி கைது

SCROLL FOR NEXT