தமிழ்நாடு

ரத யாத்திரையால் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது: சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி! 

ரத யாத்திரையால் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது என்று இமயமலை ஆன்மீகப் பயணத்திற்குப் பின் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: ரத யாத்திரையால் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது என்று இமயமலை ஆன்மீகப் பயணத்திற்குப் பின் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பத்து நாட்கள் ஆன்மீகப் பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். தனது பயணத்தில் ஹிமாச்சல் மாநிலம் தர்மசாலா, ரிஷிகேஷ், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அவர் சென்றிருந்தார்.

இந்நிலையில் தனது ஆன்மீகப் பயணம் முடிந்து அவர் செவ்வாயன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

மன நிம்மதி வேண்டி நான் இமயமலை சுற்றுப்பயணம் சென்றேன். தற்பொழுது மிகவும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன்.

தமிழகம் எப்போதுமே ஒரு மதச் சார்பற்ற நாடு.

தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரை மூலம் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது.

எனவே இதன் மூலம் யாரும் பாதிக்கப்படாமல் அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கும் என்று நம்புகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT