தமிழ்நாடு

வரி ஏய்ப்பு புகார்: தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை! 

DIN

சென்னை: வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தியாகராய நகர் சென்னையின் பரபரப்பான வர்த்தக பகுதிகளில் ஒன்று. அங்கு பிரபல துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்கும் கடைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகரில் அமைந்துள்ள  வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT