தமிழ்நாடு

வரி ஏய்ப்பு புகார்: தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை! 

வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

DIN

சென்னை: வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தியாகராய நகர் சென்னையின் பரபரப்பான வர்த்தக பகுதிகளில் ஒன்று. அங்கு பிரபல துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்கும் கடைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகரில் அமைந்துள்ள  வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT