மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு நிறைவேற்றாது: அமைச்சர் கே. சி. கருப்பணன்
மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மூத்த அமைச்சர்கள், துறை அதிகாரிகளோடு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆய்வு நடத்தியுள்ளார். இதில், தமிழக மக்கள் பாதிக்காத வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஒதுக்கியுள்ள ரூ.100 கோடி நிதியிலிருந்து ரூ.35 கோடி மக்கள் பிரச்னை தீர்வுக்கு பயன்படுத்தப்படும்.
அதேபோல், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இதுவரை அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைபடி முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றாது என்றார் அமைச்சர்.