முகப்பு
தமிழ்நாடு

மணிமுத்தாறு -பாபநாசம் அணைகளில் ஏப்ரல் 1 முதல் நீர் திறப்பு

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:08 AM
பகிர்:

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் சிறப்பு நிகழ்வாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படும். மே 31 -ஆம் தேதி வரை விநாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.