ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணி: 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தம்
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்காக 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்காக 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது
வழக்கம். அதன்படி, கடந்த 26 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு தாமிர உற்பத்தி பணி நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.