முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு போலி ஹால்டிக்கெட் விவகாரம்: ராசிபுரம் இ-சேவை மைய உரிமையாளர் தலைமறைவு

நீட் தேர்வுக்கு போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக தமிழக அரசின் இ-சேவை மையத்தின் மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகார்அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 மே, 2018 at 11:38 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:29 PM

நீட் தேர்வுக்கு போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக தமிழக அரசின் இ-சேவை மையத்தின் மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் மாணவி ஜீவிதாவுக்கு போலியான ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக ராசிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேவை மையமான டிஜிட்டல் சேவா மையத்தின் உரிமையாளர் கலைச்செல்வி மீது மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

சேலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற தனது மகளுக்கு ஹால்டிக்கெட் குளறுபடியால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மகளின் எதிர்காலத்தை வீணாக்கிய கலைச்செல்வி மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலைியல், ராசிபுரத்தில் உள்ள தமிழக அரசின் இ-சேவை மையத்தின் உரிமையாளர் கலைச்செல்வி தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.