முகப்பு
தமிழ்நாடு

நியாயம் கிடைக்க போவதில்லை: வைகோ 

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நியாயம் கிடைக்கப் போவதில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

Updated On : 15 மே, 2018 at 1:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நியாயம் கிடைக்கப் போவதில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் காவிரி வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு அதிகாரமுள்ள அமைப்பா என்பது தெரியவில்லை. ஒருவேளை, வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இல்லையெனில், அதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் திமுக தலைமையில் நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.