தமிழ்நாடு

பெரியார் பல்கலை. விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிப்பு

DIN

பெரியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில்வதற்கு விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியார் பல்கலைக்கழகத்தில் 27 துறைகளில் கற்பிக்கப்படும் 28 முதுநிலைப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் பணி கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணாக்கர்கள் நலன் கருதி முதுநிலையில் சேர விரும்பும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி மே 18-ஆம் தேதியில் இருந்து மே 25-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் துறைகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் என துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
முதுநிலைப் பாடங்கள் குறித்தும், ஏனைய விவரங்கள் குறித்தும் அறிய பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT