தமிழ்நாடு

சென்னையில் ரூ. 80-ஐ தொட்டது பெட்ரோல் விலை

DIN

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்து வருவதே காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. 

எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை குறைக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசலை கொண்டு வர வேண்டும் என்றும் ஃபிக்கி, அசோசேம் போன்ற தொழில்துறை கூட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, இன்றைய நிலவரப்படி நேற்றை விட 32 காசுகள் உயர்ந்து 80.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை நேற்றை விட 27 காசுகள் உயர்ந்து 72.14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல் விலை தொடும் புதிய உச்சம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT