முகப்பு
தமிழ்நாடு

இருபது தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் - ஓபிஎஸ் 3-ஆம் தேதி ஆலோசனை    

காலியாக உள்ள இருபது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர் 3-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

சென்னை: காலியாக உள்ள இருபது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர் 3-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்ட 18 சட்டப்பேரவைத் தொகுதிகள் உட்பட மொத்தம் 20 தொகுதிகளுக்கு முதல்வர் பழனிசாமி தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார். 

இந்நிலையில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர் 3-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கூட்டமானது அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.   

முழு கட்டுரையைப் படிக்க →