"சர்கார்' படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் "சர்கார்' படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இந்த அரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்' என்று அவர் கூறியுள்ளார்.