தமிழ்நாடு

இன்று நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலை.பருவத் தேர்வுகள் ரத்து

DIN

கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்க இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் க. துரையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT