தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டம் முழு மின் வசதி பெற ஒரு வாரம் ஆகும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சார வசதி பெற ஒரு வாரம் ஆகும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:

கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. 1,100 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிநீர், மின் விநியோகம் சீரமைப்பு பணிகள் முதற்பணியாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் மட்டும் 10,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மின்சாரம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகர் பகுதிகளில் முதல்கட்டமாக சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சார வசதி பெற ஒருவாரமாகும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT