தமிழ்நாடு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருக்கலாம்: ஸ்டாலின்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

DIN


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புயலால பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தானே, வர்தா, ஓகி வரிசையில் தற்போது கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன். 

அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கஜா புயலால் 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை! என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், பருவ மழை தொடங்கும் முன்பே நீர்நிலைகளை முறையாக தூர்வாரியிருந்தால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி! தாய், மகள், மகன் கைது!

செங்கம் திரெளபதியம்மன் கோயில் பாலாலயம்: எம்எல்ஏ பங்கேற்பு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT