தமிழ்நாடு

நிவாரணப் பொருட்களுக்கு ரயில் கட்டண விலக்கு: ரயில்வே அமைச்சருக்கு பழனிசாமி கடிதம் 

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ரயிலில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

PTI


தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ரயிலில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் கடந்த 16ம் தேதி டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது. இதில் ஏராளமானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். பல ஏக்கர் கணக்கில் விவசாயப் பொருட்களும் சேதமடைந்தது.

இந்த நிலையில், கேரள வெள்ளத்தின் போது நிவாரணப் பொருட்களை ரயிலில் அனுப்ப சரக்கு கட்டணத்தை ரத்து செய்ததைப் போல, தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு, ஆட்சியர்களின் பெயரிட்டு வரும் நிவாரணப் பொருட்களுக்கான சரக்குக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி! தாய், மகள், மகன் கைது!

செங்கம் திரெளபதியம்மன் கோயில் பாலாலயம்: எம்எல்ஏ பங்கேற்பு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT