தாமிரவருணி புஷ்கரம்: சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கம்
தாமிரவருணி புஷ்கரம் விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தாமிரவருணி புஷ்கரம் விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 14-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82610) புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.