தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் தமிழகம் சீரழிவு

தினமணி

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் தமிழகம் சீரழிந்து வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
 உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்கிறோமா என்ற தலைப்பில் பாமக சார்பில் அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் ராமதாஸ் பேசியது: கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மக்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்காக பல்வேறு சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முறையாக யாரும் பின்பற்றுவதில்லை.
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாததால் அனைத்துப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன.
 உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். அதன் மூலம்தான் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும் என்றார்.
 காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் க.பழனித்துரை உள்ளாட்சி மேம்பாடு அடைய வேண்டியதன் அவசியம் மற்றும் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசினார். பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT