தமிழ்நாடு

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

DIN

தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உள்ளாட்சித் துறையின் விதிகளை மீறி யாருக்கும் டெண்டர் அளிக்கப்படவில்லை. உலக நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளனர். 

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா?. முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. 

அதிமுகவை முடக்க ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் பலிக்காது. தமிழக உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு விருது வழங்கி பாராட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT