தமிழ்நாடு

சென்னையைச் சேர்ந்த பெண் மத போதகர் மர்மச் சாவு

DIN


சென்னையைச் சேர்ந்த பெண் போதகர் மர்மமான முறையில் தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ சபையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, ஆவடியைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் நித்யா (23). இவர், தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ள சபை ஒன்றில் தங்கியிருந்து, போதனைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சபை இல்லத்தில் அவர் செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக, சபையின் சக பெண் போதகர்கள் புகார் தெரிவித்ததால் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நித்யா கீழே விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT