தமிழ்நாடு

அறநிலையத்துறை ஊழியா்கள் மீது அவதூறு: எச்.ராஜா மீது புதிய வழக்குப் பதிவு 

இந்து சமய அறநிலையத்துறைற ஊழியா்களை தரக்குறைவாக பேசியதாக பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா மீது கள்ளழகா் கோயில் ஊழியா்கள் அளித்த புகாரின்பேரில் அப்பன் திருப்பதி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு..

தினமணி செய்திச் சேவை

மதுரை: இந்து சமய அறநிலையத்துறை ஊழியா்களை தரக்குறைவாக பேசியதாக பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா மீது கள்ளழகா் கோயில் ஊழியா்கள் அளித்த புகாரின்பேரில் அப்பன் திருப்பதி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பாஜக தேசியச்செயலா் எச்.ராஜா திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூர் பகுதியில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. 

இச்சம்பவத்தையொட்டி எச்.ராஜாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அரசு ஊழியா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சாா்பில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களை தரக்குறைவாக விமா்சித்த பா.ஜ.க தேசியச் செயலா் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகா் திருக்கோயில் ஊழியா்கள் மற்றும் அழகா்கோவில் பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் ஊழியா்கள் அப்பன்திருப்பதி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். 

அதன்பேரில் பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT