ஹெச்.ராஜா விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவித்தால் நடத்தப்படும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மாற்ற வேண்டும்.
குற்றப்பின்னணி உள்ள அரசியல்வாதிகள் பட்டியலில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது தவறானது. ஹெச்.ராஜா விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.