மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டம்: திமுக 'பகீர்' புகார்
மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
சென்னை: மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளது
இந்நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் நேரிடையாக அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:
வியாழன் மதியம் மூன்று மணிக்கு மேல் குறிப்பிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது.
அதற்கு ஏற்ற வகையில் அங்கு செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்யய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பை குறைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
எனவே தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.