தமிழ்நாடு

குமரி அருகே பாஜக - அமமுக தொண்டர்கள் மோதல்: 5 பேருக்கு கத்திக்குத்து 

கன்னியாகுமரி அருகே பாஜக மற்றும்  அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

DIN

நாகர்கோயில்: கன்னியாகுமரி அருகே பாஜக மற்றும்  அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் 278 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன,.

இந்நிலையில் கன்னியாகுமரி அருகே பாஜக மற்றும்  அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தின் பூதப்பாண்டி அருகேயுள்ள வீரவநல்லூர் என்னும் இடத்தில வியாழன் மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், வெளியே கூடியிருந்த பாஜக மற்றும்  அமமுக தொண்டர்கள் இடையே வாய்ச்சண்டை உருவானது. விரைவில் அது கைகலப்பாக மாறியது.

இதில் அமமுகவைச் சேர்ந்தவர்கள் கத்தி மற்றும் இரும்புக்கம்பியால் பாஜக தொண்டர்களைத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் ஆபத்தான கட்டத்திலிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT