தமிழ்நாடு

பெரியகுளத்தில்  துணை முதல்வர் வாக்களிப்பு

DIN


தேனி மாவட்டம், பெரியகுளம் வாக்குச்சாவடியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
 பெரியகுளம் தொகுதிக்கு உள்பட்ட தெற்கு அக்ரஹாரம் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசித்து வருகிறார். இப்பகுதிக்கு உள்பட்ட செவன்த்டே பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 9.20 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலெட்சுமி, மகன்கள் ப.ரவீந்திரநாத்குமார் (தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்),  வி.ப.ஜெயப்பிரதீப் மற்றும் தம்பி சுந்தர் ஆகியோருடன் சென்றார்.  வாக்குசாவடியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 30 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து   தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT