4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
வேட்பாளா்களின் பெயா் விவரம்:-
திருப்பரங்குன்றறம்-பி.சக்திவேல்,
சூலூா்-ஜி.மயில்சாமி,
அரவக்குறிச்சி-எஸ்.மோகன்ராஜ்
ஆகியோா் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் போட்டியிட உள்ளனா்.
இந்த அறிவிப்பை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியானது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வளரும் தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சாா்பில் எம்.காந்தி போட்டியிட உள்ளாா் என்று தனது அறிவிப்பில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.