காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, தேச பக்தர்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய நிகழ்வாகும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: காஷ்மீர் விவகாரம் மனம் நெகிழ்கின்ற நிகழ்வு. தேசபக்தர்கள் அனைவரும் கொண்டாடக்கூடியது. நாடு தழுவிய அளவில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்காக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் அகில இந்திய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சௌகான் மதுரைக்கு வந்துள்ளார். அவர் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கிறார் என்றார்.