தமிழ்நாடு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: சிபிசிஐடி அதிகாரி திடீர் மாற்றம்

DIN

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயனை தனிப்படை போலீஸார் கடந்த ஜூலை 30ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி டிஎஸ்.பி அனில்குமார் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பிராங்க்ளின் ரூபன் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT