கோப்புப்படம் 
தமிழ்நாடு

பயங்கரவாதிகளுடன் தொடர்பா? கோவையில் மூவர் கைது

தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கோவையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN


தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கோவையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) முக்கியமான ஓர் எச்சரிக்கை தகவலை தெரிவித்தது. அதில் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி, இலங்கையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் கடல் வழியாக கள்ளப்படகு மூலம் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் - இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவர்கள் கோயம்புத்தூரில் தற்போது பதுங்கியிருப்பதாகவும் அந்த தகவலில் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இந்துக்கள் போல நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் பொது இடங்களில் நடமாடக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் ஊடுருவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்

வாக்குத் திருட்டு:சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!செய்திகள் சில வரிகளில்| 7.8.25 | Rahulgandhi | MKStalin

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

பாஜகவின் பிரதிநிதியாக தேர்தல் ஆணையம்! - கார்கே விமர்சனம்

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT