தமிழ்நாடு

குரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காதோருக்கு இன்று கடைசி வாய்ப்பு

DIN


குரூப் 4 தேர்வினை எழுத விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காவிட்டால் அதற்கான முறையீட்டுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி வாய்ப்பாகும். 
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 4 தேர்வுக்கு சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpscexams.in)  கடந்த 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், தேர்வாணைய மின்னஞ்சல் (contacttnpsc@gmail.com) முகவரிக்கு உரிய விவரங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வுக் கட்டணம், கட்டணம் செலுத்திய இடம், வங்கிக் கிளை அல்லது அஞ்சலக முகவரி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். புதன்கிழமைக்குப் பிறகு (ஆக.28) பெறப்படும் கோரிக்கைகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT