தமிழ்நாடு

தெலங்கானா விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை!

ஹைதராபாத்தில் இருந்து புது தில்லி செல்லும் தெலங்கானா விரைவு ரயிலில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

IANS


புது தில்லி: ஹைதராபாத்தில் இருந்து புது தில்லி செல்லும் தெலங்கானா விரைவு ரயிலில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இன்று காலை 7.43 மணியளவில் வண்டி எண் 12723, ஹரியாணா மாநிலம் அசோட்டி ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ரயிலில் தீப்பற்றியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

அசோட்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சில நொடிகளில் இந்த விபத்து நேரிட்டது. இதனால் அசோட்டி - பல்லப்கார் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. 

தீ காரணமாக பயங்கர புகை எழுந்து தண்டவாளப் பகுதிகளை சூழ்ந்து கொண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

ரயிலின் 9வது பெட்டியில் இருந்த சக்கரத்தின் பிரேக் பகுதியில் தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
 

Photo : ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

என்னென்ன எண்ணங்கள்... மீதா ரகுநாத்!

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT