தமிழ்நாடு

மத்திய அரசை அவதூறாக விமர்சித்து முகநூலில் பதிவிட்ட இளைஞர் மீது வழக்கு

மதுரையில் மத்திய அரசை விமர்சித்து அவதூறாக முகநூலில் கருத்துகளை பதிவிட்ட இளைஞர் மீது 2 பிரிவுகளின் கீழ், போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

DIN

மதுரையில் மத்திய அரசை விமர்சித்து அவதூறாக முகநூலில் கருத்துகளை பதிவிட்ட இளைஞர் மீது 2 பிரிவுகளின் கீழ், போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 மதுரை செல்லூர் கைலாசபுரத்தைச் சேர்ந்த ரகுபதி மகன் குமரன். இவர், புரட்சிகர மாணவர் முன்னணி இயக்கத்தின் மதுரை மாவட்டச் செயலராக உள்ளார். இவர், மத்திய அரசை அவதூறாக விமர்சித்ததுடன், காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முகநூலில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
 இது குறித்து போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, செல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தியாகப்பிரியன் அளித்த புகாரின்பேரில், குமரன் மீது இந்திய அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட்டதாக 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT