தமிழ்நாடு

எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடும் இலக்கியத் திருவிழா

DIN

2019-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா கோயம்புத்தூர் ராஜஸ்தானி அரங்கில் வரும் டிசம்பர் 27 & 28 ஆம் தேதிகளில் (வெள்ளி & சனிக்கிழமை) நிகழ்கிறது. இவ்வாண்டு கவிஞர் அபி விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.

இவ்வாண்டு மலையாளக் கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்து கொள்கிறார்கள். மேலும், இரு நாட்களிலும் எழுத்தாளர்கள் / கவிஞர்கள் கே.என்.செந்தில், இசை, அமிர்தம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி, ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புக்களைப் பற்றிய விவாதங்கள் நிகழும். படைப்பாளிகள் அனைவரும் விழாவில் விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள்.

கவிஞர் அபி

கவிஞர் அபி குறித்த நூல் விழா அரங்கில் வெளியிடப்படுகிறது. அவரைப் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படும். கவிஞர் ராஜா சந்திரசேகர் தயாரித்த இந்த ஆவணப் படத்தை கே.பி.வினோத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT