தமிழ்நாடு

நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரிடம் பாஜக மனு

DIN

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக பாஜக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியதற்காக தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் நெல்லை கண்ணன் இல்லத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையே நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பாஜக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT