பிப்.17 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (பிப்ரவரி 17) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (பிப்ரவரி 17) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நில அதிர்வு புதன்கிழமை பதிவாகவில்லை. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 23 டிகிரி முதல் 31 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் எந்தப் பகுதியிலும் மழை பதிவாகவில்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.