தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை

DIN

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், 2018-19ம் கல்வியாண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தனியார் பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 கட்டணம், 8ஆம் வகுப்புக்கு ரூ.100 கட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் எனவும் தேர்வுக்கு பின் வினாத்தாளை வட்டாரவள மையங்களில் வைக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT